தேவையானவை:
பச்சரிசி - அரை கப்
பாசிப்பருப்பு - அரை கப்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு கைப்பிடி
சமையல் சோடா - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
• அரிசி, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயத்தை 4 மணி நேரம் ஊற வைத்து, இட்லி மாவு பதத்தில் அரைத்துக்கொள்ளவும்.
• உப்பு சேர்த்து 8 மணி நேரம் புளிக்க விடவும்.
• மறுநாள் சமையல் சோடா சேர்த்துக் கலக்கி, இட்லித் தட்டில் ஊற்றி இட்லிகளாக எடுக்கவும்.
• சத்தான இந்த பாசிபருப்பு இட்லியை காரச் சட்னியுடன் பரிமாறவும்.
பாசிப்பருப்பு இட்லி
வெஜிடபிள் ஆம்லெட்
உளுந்தங்களி
தேவையான பொருட்கள்....
அருகம்புல் கஷாயம்
தேவையான பொருட்கள்...
பார்லி இட்லி
தேவையான பொருட்கள்...
கார தோசை
தோசைன்னாலே நமக்கெல்லாம் ஒரே குஷிதான்.. அதிலும் கார தோசைன்னா கேட்கவே வேணாம்.. சரி, இப்போ காரதோசை செய்றது எப்புடினு பார்க்கலாமா....
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1/2 கப்
துவரம்பருப்பு - 1/4 கப்
தேங்காய் - 1/2 முடி
மிளகாய் - 4
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 10
உப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறு துண்டு
மல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* அரிசி, பருப்பு இரண்டையும் அரை மணி நேரம் ஊற வைக்கவும். இதனுடன் மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து சிறிய ரவை பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும்.
* எண்ணெயில் கடுகு தாளித்து, அரைத்து வைத்துள்ள மாவில் கொட்டி கலக்கவும்.
* தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
* தோசை கல்லில் மாவை ஊற்றி தோசை வார்க்கவும்.
* மாவு மீந்து விட்டால், அடுத்த முறை தோசை ஊற்றும்போது மீந்த மாவில் பொடியாக அரிந்த வெங்காயம், கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து தோசை வார்க்கவும்.
டயட் அடை
தேவையான பொருட்கள்.....
கொள்ளு - கால் கப்
பார்லி - கால் கப்
வெள்ளை சென்னா - கால் கப்
புழுங்கல் அரிசி - கால் கப்
வால் நட் - கால் கப்
ராகி மாவு - ஒரு மேசை கரண்டி
இஞ்சி - ஒரு அங்குல துண்டு
பூண்டு - 3 பல்
ப.மிளகாய் - 2
கொத்து மல்லி, புதினா, கருவேப்பிலை - சிறிது
சின்ன வெங்காயம் - 6
உப்பு - தேவைக்கு
ஆலிவ் ஆயில் - 2 ஸ்பூன்
செய்முறை.....
• கொத்து மல்லி, புதினா, கருவேப்பிலை, சின்ன வெங்காயம், ப.மிளகாய் அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• கொள்ளு, வெள்ளை சென்னா , அரிசியை இரவே ஊற போடவும்.
• பார்லி அரைப்பதற்கு ஒரு மணி நேரம் முன் ஊறவைக்கவும்.
• வால் நட்டை ஒரு மணி நேரம் முன் கொதிக்கும் வெண்ணீரில் ஊறவைத்து தோலெடுகக்வும்.
• அரைக்கும் போது பூண்டு, இஞ்சியை சேர்த்து அரைத்து கொள்ளவும்.
• அரிசியை போட்டு நன்கு அரைத்து மீதி உள்ள கொள்ளு, வெள்ளை சென்னா, பார்லி, வால் நட்டை, பொருட்களையும் முக்கால் பதத்திற்கு அரைகக்வும்.
• அரைத்த கலவையில் வெங்காயம், கொத்து மல்லி, புதினா, கருவேப்பிலையை சேர்த்து நன்கு கலக்கவும்.
• இந்த கலவையை தோசைகளாக கொஞ்சம் ஆலிவ் ஆயில் தெளித்து சுட்டெடுக்கவும்.